internet

img

'கொவா பஞ்சாப்' - புதிய மொபைல் செயலி அறிமுகம்!

கொரோனா வைரசை கையாள்வது குறித்த விழிப்புணர்வை வழங்க, கொவா பஞ்சாப்' என்ற புதிய மொபைல் செயலி பஞ்சாப் தலைமைச் செயலாளர் கரண் அவ்தார் சிங் அறிமுகப்படுத்தினார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், கொரோனா வைரசை கையாள்வது குறித்த விழிப்புணர்வை வழங்க, கொவா பஞ்சாப்' என்ற புதிய மொபைல் செயலியை பஞ்சாப் மாநிலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை பஞ்சாப் தலைமைச் செயலாளர் கரண் அவ்தார் சிங் அறிமுகப்படுத்தினார்.

கொவா என்பது ”கொரோனா வைரஸ் அலர்ட்” எனக் குறிக்கிறது. இந்த செயலியானது, பல்வேறு சீர்திருத்த மற்றும் தடுப்பு பராமரிப்பு ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் விழிப்புணர்வை பரப்புவதற்காக, சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையுடன் கலந்தாலோசித்து உருவாக்கப்பட்டது.

இந்த செயலியில், கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு, நோய் தொற்று வராமல் தடுக்கும் முறைகள், மற்ற இடங்களுக்கு நாம் பயணம் செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய முறைகள் உள்ளிட்ட தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த செயலி, ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் ஆகிய இரண்டு இயங்குதளங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த செயலியை தங்கள் போன்களில் வைத்திருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தினார். இதனால் அவர்களுக்கு பல்வேறு அரசாங்க ஆலோசனைகளை விரைவாக தெரிவிக்க முடியும்.